சென்னை, ஆக.4- அரசு திட்டப் பணிகள், பருவமழை காலங்க ளின்போது மீட்பு, நிவாரணப் பணிகள் உள்ளிட்டவற்றை கவனிக்க சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண் காணிக்கவும், பருவமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின்போதும் மாவட்டங்களில் மேற்கொள் ளப்படும் மீட்பு மற்றும் நிவார ணப் பணிகளை கண் காணிக்கவும் மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அதிகாரிகள் வேறு முக்கிய பணிகளுக்கு மாற்றப்படும்போதும், ஓய்வுபெறும்போதும் தேவை கருதியும் அந்தந்த மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில், தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு விவரம்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் துறை செயலர் சி.விஜயராஜ்குமார், திண்டுக்கல் மாவட்டத் துக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவநீத், சென்னைக்கு சமூக நலத்துறை செயலர் ஜெயசிறி முரளிதரன், திருவண்ணாமலைக்கு பள்ளிக்கல்வி செயலர் எஸ்.மதுமதி, தூத்துக்குடிக்கு தொழிலாளர் நலத்துறை செயலர் கே.வீரராகவ ராவ், கள்ளக்குறிச்சிக்கு கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், திருப்பூருக்கு தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் எம்.வள்ளலார், கோயம் புத்தூருக்கு மனிதவள மேலாண்மைத் துறை செயலர் கே.நந்தகுமார், புதுக்கோட்டைக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் இ.சுந்தரவல்லி, நாமக்கல்லுக்கு சிறுபான் மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம், நாகப்பட்டினத்துக்கு தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் ஆகி யோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக் கப்பட்டுள்ளனர்.