ஒன்றிய அரசின் அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் அம்பலம்

1 Min Read

புதுதில்லி, ஆக.14- அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

2015 ஜனவரி முதல் மார்ச் 2022 வரை ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத் தின் கீழ் அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒன்றிய அரசால் செயல் படுத்தப்பட்டது. ‘செயல் திறன் உத் தரவாதமாக’ ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டிய 3.11 கோடி ரூபாய் 1.86 கோடியாக குறைக்கப் பட்டுள்ளது. 

அயோத்தியில் உள்ள குப்தர் காட்டில் பணியை 14 ஒப்பந்ததாரர் களுக்கு ஒதுக்கிய போது ஒப்பந்தத் தொகையை முடிவு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்ட பிறகு சில ஒப்பந்ததாரர்களின் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டது. 

அதை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டி பலன்களை வழங்குவதும் பொரு ளாதார இழப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்கள் செய்யாத பணி களுக்கு ஊதியம் வழங்குவதையும் சிஏஜி கண்டறிந்துள்ளது.  அயோத்தி திட்டம் மட்டுமின்றி, கோவாவில் உள்ள சிறைச்சாலை, இமயமலை சுற்றுச் சுவர், தெலங் கானா பாரம்பரிய இடங்கள் மத்தியப் பிரதேசத்தில் புத்த சர்க்யூட் போன்ற திட்டங்களை செயல் படுத்துவதிலும் நிதி முறை கேடுகள் நடந் துள்ளன. 

இத்திட்டங்களை செயல் படுத் துவதில் நடந்த முறை கேடுகளால் மொத்தம் சுமார் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப் பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *