மறைந்த கவிஞர் செவ்வியனுக்கு நமது வீர வணக்கம்!

viduthalai
0 Min Read

ஆழ்ந்த தமிழ் அறிஞரும், சிறந்த சிந்தனை எழுத்தாளரும் பல ஆய்வு நூல்கள் படைத்து – திருக்குறள் பரப்புதல் முதலியன செய்தவரும், நமக்குப் பல ஆண்டு கால அறிமுக நண்பருமான கவிஞர் செவ்வியன் அவர்கள் நேற்று (2.8.2024) காலமானார் என்பதை அறிந்து மிகவும் துயருறு கிறோம். சீரிய பண்பாளர், உறுதிமிக்க கொள்கை சிந்தனை உடையவராக இருந்தவர்.அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் நமது ஆறுதலையும் – மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அவருக்கு நமது வீர வணக்கம்!

தலைவர்
3.8.2024  திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *