ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி

viduthalai
1 Min Read

ஜெயங்கொண்டம், ஆக. 3- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 30.07.2024 அன்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் குருவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில் ஜெயங்கொண் டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்கள் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடத்தையும், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட ஆண் கள் பிரிவில் முதலிடம் பிடித்த அணி மாவட்ட போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரி யர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இரு பால் ஆசிரியர்கள், பெற் றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *