முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

1 Min Read

அறந்தாங்கி, ஆக. 2- அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தங்க.கண்ணன் அவர்களின் தந்தையார் கீரமங்கலம் அதங்கராசு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவர்களின் இல்லத்திற்கு சென்று மாவட்ட தலைவர் க. மாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தரராசன் அறந்தாங்கி நகர தி.கதலைவர் ஆ.வேலுச்சாமி மாவட்ட மகளிர் பாசறை மாவட்டதலைவர் ஞானாம்பாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வீரையா பெரியார் பிஞ்சு இன்நிலா ஆகியோருடன் சென்று புத்தகங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம் அனைவருக்கும் இனிப்பு தேனிர் வழங்கி அய்யாவின் துணைவியார் ராசலெட்சுமி மகிழ்ந்தார்கள். நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *