பண்ணாரியில் அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜையாம்!

1 Min Read

அரசியல்

ஈரோடு,ஆக.15- சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்களாம்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில்  பண்ணாரி, ராஜன் நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம் பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக தேனிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பேருந்தில் பல ஆண்டு களாக பண்ணாரி மற்றும் ராஜன் நகரை சேர்ந்த 36 தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள்.  

தொழிலாளர்கள் அந்த பேருந்துக்கு Ôதிருஷ்டிÕ கழிக்க(?)  ஆடி மாதத்தில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கமாம்!

இந்த நிலையில் கரோனா காரணமாக 3 ஆண்டுகளாக தொழி லாளர்கள் பேருந்துக்கு பூஜை செய்யவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தொழிலாளர்கள் பூஜை நடத்த முடிவு செய் தார்கள். இதையடுத்து அதற் கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர். 

இந்த நிலையில்  கடந்த 13.8.2023 அன்று காலை சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பேருந்து பண்ணாரி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பேருந்து ஏற வந்த தொழிலாளர்கள் அந்த பேருந்தை நிறுத்தி மாலை அணிவித்து சந்தனம், திருநீறு, குங்குமம் வைத்து மரியாதை செலுத் தினர். மேலும் கிடாய் பலியிட்டு பூஜை நடத்தினார்களாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *