சங்பரிவாரின் அராஜகம் பள்ளி வாகனத்தையும் விட்டு வைக்காத காவடி யாத்திரையினர்

1 Min Read

அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற ஊரில் பள்ளி வாகன ஓட்டுநர் சாலையை மறித்துச்சென்றுகொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் நபர்களை ஓரமாகப் போகச்சொல்லி ஹாரன் அடித்தாராம்.
உடனே வெகுண்ட காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் பள்ளி வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டனர். இந்த தாக்குதல் நிகழ்வின் போது காவல்துறை வெறுமனே வேடிக்ைகப் பார்த்தது, நல்ல வாய்ப்பாக ஓட்டுநர் குழந்தைகளை உடனடியாக இறக்கி அருகில் உள்ள ஒரு கடையில் அமரவைத்துவிட்டார். இல்லை என்றால் குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டிருக்கும், இதுவரை உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் ரகளையில் ஈடுபட்ட காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் தற்போது அரியானாவிலும் தங்களின் வன்முறை ஆட்டத்தை – அதுவும் பள்ளிக் குழந்தைகள் செல்லும் வாகனத்தின் மீதே காட்டி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *