அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற ஊரில் பள்ளி வாகன ஓட்டுநர் சாலையை மறித்துச்சென்றுகொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் நபர்களை ஓரமாகப் போகச்சொல்லி ஹாரன் அடித்தாராம்.
உடனே வெகுண்ட காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் பள்ளி வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டனர். இந்த தாக்குதல் நிகழ்வின் போது காவல்துறை வெறுமனே வேடிக்ைகப் பார்த்தது, நல்ல வாய்ப்பாக ஓட்டுநர் குழந்தைகளை உடனடியாக இறக்கி அருகில் உள்ள ஒரு கடையில் அமரவைத்துவிட்டார். இல்லை என்றால் குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டிருக்கும், இதுவரை உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் ரகளையில் ஈடுபட்ட காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள் தற்போது அரியானாவிலும் தங்களின் வன்முறை ஆட்டத்தை – அதுவும் பள்ளிக் குழந்தைகள் செல்லும் வாகனத்தின் மீதே காட்டி உள்ளனர்.
சங்பரிவாரின் அராஜகம் பள்ளி வாகனத்தையும் விட்டு வைக்காத காவடி யாத்திரையினர்

Leave a Comment