கழகத் தலைவர் இரங்கல்
சீரிய பகுத்தறிவாளரும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் (வயது 85) முதுமையின் காரணமாக இன்று (15.8.2023) அதிகாலையில் மறைவுற்றார்.
மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி யான ஆ.பத்மநாபன் அவர்களின் அலுவலகம் மற்றும் பொது வாழ்க்கைச் சூழலுக்கு இணக்கமாகவும், உறு துணையாகவும் வாழ்ந்தவர். ஆ.பத்மநாபன் – சீத்தம்மாள் இணையருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சென்னை, பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் மறைந்த சீத்தம்மாள் அவர்களின் இறுதி நிகழ்வு 17.8.2023 அன்று காலையில் நடைபெற இருக்கிறது. சீத்தம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆ.பத்மநாபன் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.8.2023