‘வேர்களைத் தேடி’ திட்டம் நூறு அயலகத் தமிழர்கள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 Min Read

சென்னை, ஆக.2 ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் 15 நாட்கள் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று (1.8.2024) தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்டைய தமிழர்களின் கட்டடம், சிற்பக்கலை, நீர்மே லாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை கடந்தாண்டு மே 24-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இத்திட்டப்படி, அயல்நாடு களில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங் களுக்கு, தமிழ்நாடுஅரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.அதன் அடிப்படையில், சென்ற ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் 4 நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்டமுதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 2-ஆம் கட்ட பயணமாக, தென்ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோ னேஷியா, மொரிஷியஸ், ஆஸ்தி ரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த100 அயலகத் தமிழ் இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஆக.1 முதல் 15-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாகச் செயல்பட்டு தமிழர்களின் கலாச் சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர்.

இந்நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், இணைச் செயலர் பா. விஷ்ணு சந்திரன், மறுவாழ்வுத்துறை ஆணையர்

பா. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *