சிதம்பரம், ஆக. 2- சிதம்பரம் மாவட்டத்தில், தலைமைக் கழகம் அறிவித்த ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு பிரச்சரப் பேரணி 11.7.2024 அன்று காலை 11:30 மணிக்கு புதுச்சத்திரம் வந்தடைந்தது. மாவட்டத் தலைவர் தலைமையில் பிரச்சாரக் குழுவினருக்கு வரவேற்பளித்து – கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனிக்கு பயனாடை அணிவிக்கப்பட்டது.
12 மணியளவில் முதல் நிகழ்ச்சி யாக பரங்கிப்பேட்டையில், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் தேன்மொழிசங்கர், பேரூராட்சித் துணைத் தலைவர் முகம்மது யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறு.கலைச்செல்வன், துரை மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
பகல் 1 மணியளவில் புவனகிரி யில் மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் தலைமையில், பேரூராட்சி துணைத் தலைவர் முல்லை மாறன் முன்னிலையேற்றார். புவனகிரி பாலம் முழுதும் இதுவரை இல்லாத அளவில் மாவட்ட இணைச் செயலர் கழக கொடிகளைக் கட்டியிருந்தார். புவனகிரி ஏ.பி.இராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பகல் 2 மணியளவில் அண்ணா மலை நகர் இராசேந்திரன் சிலை அருகில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். சிபிஎம் நகர செயலர் எஸ்.ராஜா நன்றி கூறினார்.
பேரூராட்சித் தலைவர் வி.தமிழ்ச்செல்வி, கவுன்சில்ர் விஜயா, தியாக விஜயகுமார், இரா.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மதிய உணவு பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் உணவு அருந்தினர். மதிய உணவு ஏற்பாட்டை பேரூராட்சித் தலைவர் க.பழனி ஏற்றுக் கொண்டார். விசிக சார்பில் ஊடகத்துறை செயலர் குறிஞ்சிவளவன் கலந்துகொண்டார்.
மாலை 4 மணிக்கு பேரணி காட்டுமன்னார்குடியை அடைந்தது. மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்ன் தலைமையில் நிகழ்ச்சி நடை பெற்றது. நகர விசிக சார்பில் துணைப் பொதுச் செயலாளருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மாலை 5 மணியளவில் 5ஆவது நிகழ்ச்சியாக சேத்தியாத்தோப்பில் மாவட்ட துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார்தாசன் தலைமையில், மதிமுக மாவட்ட செயலர் எ.என்.குணசேகரன், மதிமுக ஒன்றிய செயலர் தில்லை, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலர் சு.சேரலாதன், கழக பொதுக் குழு உறுப்பினர்கள் வலசக்காடு அரங்கநாதன், சுமதி பெரியார்தாசன், நகர தலைவர் பா.இராசசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட கழகச் சார்பில் பேரணியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பயனாடை அணி விக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், பொதுக் குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன் ஆகியோர் பயனாடை அணிவித்தனர்.
நிகழ்ச்சி முழுதும் காட்டு மன்னார்குடி ஒன்றிய செயலர் ப.முருகன், இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி செயலர் பஞ்சநாதன், காட்டுமன்னார்குடி ஒன்றிய அமைப்பாளர் சண்முகசுந்தரம், புவனகிரி க.வீரமணி, மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர் வாகனத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடுமாறன், மாவட்ட ப.க. செயலர் ச.செங்குட்டுவன், புவனகிரி அ.இராமலிங்கம், பெரியார் படிப்பகத் துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், காட்டுமன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், வலசக்காடு ஆர்.விரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். சேத்தியாத்தோப்பு நகர தலைவர் பா.இராசசேகரன் அனைவக்கும் தேநீர் வழங்கினார்.