கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் திட்டமிடப்பட்டு பெரும்பான்மைவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்கிறார் மூத்த எழுத்தாளர் ஆகார் படேல்.
* அரியானா நூஹ் மாவட்டத்தில் நாங்கள் மீண்டும் பேரணி நடத்துவோம்; அனைவரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்ற புல்வால் மாவட்ட மகா பஞ்சாயத்து முடிவிற்கு எதிராக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆளுநர் மாளிகை
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் செங்கோட்டையில் மோடியின் கடைசி உரை இதுதான்: மம்தா கருத்து
* கருநாடகாவில் அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு.
* ஆதிவாசி அதாவது பூர்வீக பழங்குடியினர் என்ற சொல்லை நீக்கி வனவாசி என பாஜக அரசு அழைப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும் என ராகுல் குற்றச்சாட்டு.
தி இந்து:
* ‘சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும், நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என்று குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* பி.எம்.-உஷா கல்வி திட்டத்தில் சேராத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி உதவி நிறுத்தம். தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் திட்டத்தில் சேர மறுப்பு.
தி டெலிகிராப்:
* ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசு தகவல்
– குடந்தை கருணா