நீட் எதிர்ப்புப் பரப்புரை – திருப்பூர் கழக மாவட்டத்தில் வரவேற்பு

viduthalai
1 Min Read

திருப்பூர், ஆக. 1- திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகர கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவிநாசி பேருந்து நிலையத் திற்கு முன் நடந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி வரவேற்று பேசினார்.

தோழர்கள் முத்து சரவணன், விரப்பன், மதிமுக ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராசு, சன்.முத்துக்குமார், பொறியாளர் ஆனந்த்குமார், வெ.குமாரசாமி ப.க மாவட்ட தலைவர், மாவட்ட இளைஞரணி தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காப்பாளர் அ. ராமசாமி 20 புத்தகங்களை பெற்றுக்கொண்டார். கழக பேச்சாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை பயண நிகழ்ச்சி பட்டியல். அன்னூர், அவிநாசி, ராயபுரம், வீரபாண்டி பிரிவு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *