நீட் எதிர்ப்புப் பரப்புரை – திருப்பூர் கழக மாவட்டத்தில் வரவேற்பு

1 Min Read

திருப்பூர், ஆக. 1- திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகர கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவிநாசி பேருந்து நிலையத் திற்கு முன் நடந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி வரவேற்று பேசினார்.

தோழர்கள் முத்து சரவணன், விரப்பன், மதிமுக ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராசு, சன்.முத்துக்குமார், பொறியாளர் ஆனந்த்குமார், வெ.குமாரசாமி ப.க மாவட்ட தலைவர், மாவட்ட இளைஞரணி தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காப்பாளர் அ. ராமசாமி 20 புத்தகங்களை பெற்றுக்கொண்டார். கழக பேச்சாளர் த. மு. யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை பயண நிகழ்ச்சி பட்டியல். அன்னூர், அவிநாசி, ராயபுரம், வீரபாண்டி பிரிவு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *