பெண்களை இழிவுபடுத்திய வழக்கில் யூடியூபர் கைது

viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 1- பெண்களை இழிவுப்படுத்திய வழக்கில் ‘பிரியாணி மேன்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்த நபரை குற்றப்பிரிவு புலனாய்வு காவல் துறையினர் கைது செய்தனா்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைத் சோ்ந்த இளம்பெண் ஒருவா், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், தான் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் செம்மொழிப் பூங்காவையும் அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், ஆபாசமான உடல்மொழி சைகைகளை காட்சிப் பதிவு செய்து அதை ‘பிரியாணி மேன்’ எனும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வரும் அபிசேக் ரபி என்பவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை தெற்கு மண்டல கணினிசாா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 29.7.2024 அன்று புகாா் அளித்தாா்.

இதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அபிஷேக் ரபியை (29) கைது செய்தனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *