வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 17ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ், காவல்துறை அதிகாரி வி. சந்திரா பங்கேற்பு

Viduthalai
2 Min Read

வெட்டிக்காடு, ஜூலை 31 வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகு லேஷன் பள்ளியில் 26.7.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு 17 -ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் வரவேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த உரத்தநாடு காவல்துறை அதிகாரி வி. சந்திரா முன்னிலை வகித்தார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநரும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான, T.கிருஷ்ணகுமார் சில்லத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் அய்ஸ் வர்யா பாரதி மற்றும் வெட்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மைனர் ஆகியோர் பங்கேற்றனர்.
நான்கு வண்ண குழு மாணவர்களின் பெரும் திரள் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு வீராங்கனைகள் ஒலிம்பிக் தீச்சுடரை ஏந்தி வந்து பீடத்தில் தீச்சுடர் ஏற்றினர். விளையாட்டுப் போட்டிக்கான உறுதி மொழி மாணவர்களால் ஏற்கப்பட்டன.

வண்ண பலூன்களை பறக்கவிட்டு சிறப்பு விருந்தினர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பள்ளியின் முதல்வர் சு.சாந்தி வரவேற்புரையாற்றினர். வருகை புரிந்த அனைவரும் பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். சென்ற ஆண்டில் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் புரிந்த சாதனை களை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மா.நித்யா விளையாட்டு ஆண்டறிக்கையாக வாசித்தளித்தார்.

விளையாட்டுப் போட்டிகளிலும், நிகழ்வு களிலும் பங்கு பெற்று சிறப்பித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டி சிறப்புரை வழங் கினார். மன அழுத்தம் குறைந்து மன மகிழ்வோடு அனைத்தையும் கண்டு களித்தேன் என தமது உரையில் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த உரத்தநாடு காவல்துறை அதிகாரி வி.சந்திரா காவல்துறையின் முக்கிய எண்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி விழிப்புணர்வு அளித்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படின் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறு தனது கைப்பேசி எண்ணை அளித்தார். பல்வேறு பணிகளுக்கு இடையே இன்று நன்முறையில் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்வோடு களித்தேன் என பாராட்டுரை வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்க உடன் தாளாளர் ,ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் பணியாளர்கள் அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மா.அன்புச் செல்வி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவு பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *