சிறுதொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி தலைவர் எஸ்.ஜே.ஜெயின் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 31- சிறு – குறு – நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கியின் 2024 ஜூன் 30 அன்று முடி வடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகளை வெளியிட்ட இவ்வங்கியின் மேலாண் இயக்குநர்
எஸ்.ஜே.ஜெயின் கூறியதாவது:
வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் உயர்ந்து ரூ.12.20 லட்சம் கோடி என பதிவாகியிருக்கிறது. ஜூன் 23இல் பதிவான ரூ.1,709 கோடி என்பதிலிருந்து ஜூன் 24இல் ரூ.2,403 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 41 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. தொழில் முனைவோர்களின் மேம்பாட்டிற்காக சிறு – குறு – நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் வங்கியின் கடன் உதவிகளை அதிகரித்து வருகிறோம்.

பல்வேறு அம்சங்களின் விரிவான தொகுப்பைக் கொண்ட INDSMART என்ற புதிய ஆம்னி சேனல் பேங்கிங் செயலி வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட பில் பேமெண்ட், பே டு கான்டாக்ட் (தொடர்பு நபருக்கு பணம் செலுத்துவது), இ-ஷாப்பிங் / எம்-ஷாப்பிங், கிராஸ் பிளாட்ஃபார்ம் அணுகுவசதி, கோல் பிளானர் போன்ற அம்சங்களை இச்செயலி கொண்டிருக்கிறது.
மேலும் ஒற்றை கிளிக் செய்வதன் மூலம், கடன்களுக்கு ஒருவரால் விண்ணப்பிக்க இயலும். வேளாண் கடன், நகைக்கடன், சிசு முத்ரா, தனிநபர் கடன், சிறு- குறு – நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME & KCC) கடன்களை புதுப்பித்தல், குறித்த கால டெபாசிட்டுகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளை தொடங்குதல் என பல்வேறு சேவைகளை பெறமுடியும்.
குறைந்த செலவிலான டெபாசிட்டுகளை பெறுவதற்கு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனிப் பிரிவுகளை வங்கி நிறுவியிருக்கிறது; மதிப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு பிரத்யேக சேவை நேர்த்தியாக கிடைப்பதை உறுதிசெய்வது இதன் இலக்காகும்.

ஒருகூரையின்கீழ் நிதி திட்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பையும் வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வழியாக நேர்மறையான மாற்றத்தை முன்னெடுக்கும் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்வது எமது நோக்கமாகும். தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிற நிதிசார் தளத்தில் எமது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையைப் பெற்று வளர்ச்சி காண்பதற்கு ஏதுவாக்குவதன் வழியாக இதை சாத்தியமாக்குவது எமது குறிக்கோளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *