‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளியுங்கள் குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்

Viduthalai
4 Min Read

அரசியல்

சென்னை, ஆக. 15-  தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆவதால், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலை யிட்டு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில் தற் கொலை செய்துகொண்டார். சோகம் தாங்காமல் அவரது தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.8.2023) வெளியிட்ட அறிக்கையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப் போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.8.2023) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற் கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (ழிணிணிஜி – ‘நீட்’) தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையிலான மருத்துவ சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய மாணவர் களுக்குமே சாதகமாக உள்ளது. 

அடிப்படையிலேயே ஏழை, எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்த தேர்வு முறை உள்ளது.

நீட் போன்ற நுழைவுத் தேர் வின்அடிப்படையில் சேர்க்கை நடப் பதைவிட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும். நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்கு தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்து.

நீதிபதி குழு ஆய்வு

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர் வால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற் கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந் துரைகளை சமர்ப்பித்தது. இந்த குழு வின் அறிக்கை மற்றும் பல்வேறு விவா தங்களின் அடிப்படையில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட மசோதா – 2021′ தமிழ் நாடு சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்.13-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, 18ஆ-ம் தேதி ஆளுநருக்கு அனுப்பப் பட்டது. ஆளுநர் 5 மாதங்களுக்கு பிறகு, அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். இதையடுத்து, 2022 பிப். 8ஆ-ம் தேதி சட்டப் பேரவையில் மீண் டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. 

ஆளுநர், இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதா தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி கோரிய விளக்கங்கள், ஒன்றிய உயர்கல்வி அமைச்சகம் கடந்த 2022 ஆக.26 மற்றும் கடந்த மே 15 ஆகிய தேதிகளில் கோரிய விளக்கங்கள், ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஜன.13ஆ-ம் தேதி கோரிய விளக்கங்கள் ஒன்றிய உள்துறை மூலம் பெறப்பட்டது. 

ஒன்றிய அமைச்சகங்கள் கோரிய அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்கியது. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு இது வரை ஒப்புதல் அளிக்கப்படாததால், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இது மாணவர்கள், பெற்றோர் மனதில் மிகுந்த கவலையை, மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் மாணவர்களும், சில நிகழ் வுகளில் அவர்களது பெற்றோரும் தற் கொலை செய்து கொள்ளும் பல்வேறு சோகமான சம்பவங்கள் நடந்திருப்பது கவலை அளிக்கிறது. சமீபத்தில்கூட, நீட் தேர்வில் தோல்விஅடைந்த மன உளைச்சலில், சென்னை குரோம் பேட்டையை சேர்ந்த ஒரு மாணவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற் கொலை செய்து கொண்ட மாணவர் களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந் துள்ளது.

தமிழ்நாடு மக்களின் கருத்து

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். 

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறை வேற்றி அனுப்பிய, நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பு. அதை செயல் படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும், தகுதியான மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கிடைப்பதில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவதற்கும் காரணமாக அமைகிறது.

இந்த விவகாரத் தில் இந்திய குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு, நீட் தொடர்பான சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *