‘மகளிர் உரிமைத்தொகை’ : ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை, ஆக.15- மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கும் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலப் பொது செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு விதி முறைகள் அறிவிக்கப்பட்ட உட னேயே, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர நலவாரிய அமைப்புகளில் உதவித் தொகை பெறக்கூடிய பெண்களையும் இத்திட்டத்தில் பயனாளிகளாக இணைக்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத் திற னாளிகள் துறை சார்பில் வழங்கப் படும் பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்ப தலைவிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத் தலைவிகள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய் வூதியத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு துறை ஓய்வூதியத் திட்டம் போன்ற திட்டங்களில் ஓய்வூதியம் பெறக் கூடிய பயனாளி களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

இதனால் ஏராளமான பெண் கள் தமிழ்நாட்டில் பயன்பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மக்களின், பெண்களின் உணர்வு களை மதித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு மிகச் சரியானது என ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *