இந்தியாவில் முதன் முதலில் அலைபேசி சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள்

Viduthalai
1 Min Read

1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான அலைபேசி சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது.
1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய ஒன்றிய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள், மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களுடன் முதல் அலைபேசி மூலம் பேசி தொடங்கி வைத்தார்.
மோதி – டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது அன்றைக்கு அவர்கள் பயன்படுத்திய அலைபேசி விலை 50 ஆயிரம் ரூபாய்
ஒருஅலைபேசி இருந்து இன்னொரு அலைபேசிக்கு அவுட்கோயிங் கால் செய்ய நிமிடத்திற்கு 17 ரூபாய் கட்டணமாய் வசூக்கப்பட்டது. வெளியில் வரும் அழைப்பிற்கு 8 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *