முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்: காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக. 15-  சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஅய்டி கூடுதல் காவல்துறை தலைமை இயக் குநர் க.வெங்கட்ராமன், சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உட் பட 15 பேருக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலர் பெ.அமுதா வெளியிட்ட அறிவிப்பு:

மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர நாளை முன்னிட்டு, முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சிபிசிஅய்டி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் க.வெங்கட்ராமன், சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், உளவுப் பிரிவு டிஅய்ஜி சு.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் பஹீ.ஷாஜிதா, தனிப் பிரிவு குற்றப் புலனாய்வு துறை காவல்துறை கண்காணிப்பாளர் ஹ.கிருஷ்ண மூர்த்தியின் பணியை பாராட்டி சிறந்த பொது சேவைக்கான தமிழ் நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப் படும்.

அதேபோல, புலன்விசாரணை பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப் புடன் மிக சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச் சரின் காவல் புலன் விசாரணைக் கான சிறப்பு பணி பதக்கம் வழங்கப் படுகிறது. திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் சரக உதவி ஆணையர் வே.அனில் குமார், மதுரை சரக சிபிசிஅய்டி டிஎஸ்பி கோ.சரவ ணன், காவல் ஆய்வாளர்கள் ர.மாதையன் (கோயம்புத்தூர் சூலூர்), மா.அமுதா (பீளமேடு), ம.அனிதா (தூத்துக்குடி மாசார்பட்டி), அ.சித்திராதேவி (திருப்பூர் இணைய குற்றப் பிரிவு), ந.மணிமேகலை (சென்னை பெரு நகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு), அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் இரா.விஜயா (சிவ கங்கை மானாமதுரை), ஆ.மகா லட்சுமி (அரியலூர்), திருச்சி சிபிசிஅய்டி ஆய்வாளர் மறைந்த கு.சிவா இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறும் ஒவ்வொருவருக் கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும். இந்த விருதுகளை முதலமைச்சர் மற்றொரு விழாவில் வழங்குவார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *