அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு – தாழ்வு இல்லை என்றால், பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு – தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு – தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.
‘குடிஅரசு’ 3.11.1929