சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைச்சட்டம் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

2 Min Read

சென்னை, ஆக. 15- சிறுவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஆன் லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டது. தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சூதாட்ட விளை யாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர் வில் நேற்று (14.8.2023) மீண்டும் விசார ணைக்கு வந்தது.

அப்போது, தமிழ் நாடு அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் ஆஜரானார். அவர் வாதாடியதாவது:

இந்த வழக்கை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தொடரவில்லை. மாறாக, அந்த சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் ஆன்லைன் நிறுவனங் கள்தான் தொடர்ந்துள்ளன. 

கிளப்களுக்கு வெளியே ரம்மி விளையாடுவதற்கு தடை விதிக் கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆன்லைனில் 24 மணி நேரமும் ரம்மி விளையாட முடியும். குறிப் பிட்ட நேரத்துக்கு மேல் விளை யாடக் கூடாது என எந்த நேரக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இதை முறைப்படுத்தவும் இயலாது. ரூ.5 ஆயிரம் செலுத்தி விளையாடி னால் ரூ. 5,250 வழங்குகின்றனர். 

இது நேரடியாக விளையாடும் போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்துவிட்டால் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்குகின்றனர். இதே போல வேறு ஏதேனும் திறமையான விளையாட்டுகளுக்கு வழங்கு கிறார்களா என்றால் இல்லை. 

முழுக்க முழுக்க மோசமானது

போனஸ் போன்ற கவர்ச்சிகர மான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி, இணையவழி சூதாட்ட விளையாட்டு நிறுவனங் கள் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து வருகின் றன. வழக்கமான ரம்மி விளை யாட்டைவிட இது முழுக்க, முழுக்க மோசமானது என்பதால்தான், இந்த சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை அனுமதித்தால், இதேநடைமுறை எல்லா விளையாட்டுகளிலும் புகுந்துவிடும்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சி னையை ஏற்படுத்தி, பொது ஒழுங் கைப் பாதித்து விடும் என்பதாலும், சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற, தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

இது திறமைக்கான விளை யாட்டு அல்ல. ஆன்லைன் நிறுவ னங்கள் மக்களை சுரண்டி சூதாட் டத்தில் ஈடுபடுவது என்பது அடிப் படை உரிமையல்ல என்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் வாதிட்டார். அதையடுத்து நீதிபதி கள், வழக்கு விசாரணையை வரும் 17ஆ-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட் டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *