கழக தோழர் குடும்ப விழா

1 Min Read

தஞ்சை, ஜூலை 30- தஞ்சை மாநகர கழக செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்செல்வன் 48ஆவது பிறந்தநாளான 27.7.2024 அன்று காலை 10.30 மணி அளவில் அவர்களது இல்லத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையருக்கு பயனாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடப்பட்டது

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், திராவிடர் கழக இளைஞர் அணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார் மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி‌.கலைச்செல்வன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *