அறிவியல் வளர்ச்சி: நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Viduthalai
1 Min Read

கோவை, ஜூலை 30– கிணத்துக் கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக ‘ஸ்டெம்’ கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மய்யம் திறப்பு விழா (27.7.2024) அன்று நடைபெற்றது.

இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண் டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப் படிப்பை படித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

“நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டு பிடித்து விட்டோம். நிலவில் மெதுவாக துருவப் பகுதியில் இறங்க முடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இதைத்தொடர்ந்து நிலவிலேயே பன்னாட்டு விண்வெளி மய்யம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 3 லட்சம் தானியங்கி வங்கிகள் உள்ளது. இவற்றையெல்லாம் இணைப்பது செயற்கைக்கோள்கள் தான். இந்த செயற்கைக்கோள் எப்போதும் பத்திரமாக இருக்க வேண்டும்.

அதன் தர நிர்ணயம் சிறப்பாக இருந்தாக வேண்டும். செயற்கைக் கோள்கள் எல்லாம் திரும்பத் திரும்ப செய்யும் போது ஆராய்ச்சி மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு சிரமமாகும்.

அதனால் அதன் பணியை தனி யாருக்கு கொடுக்க முயற்சிக்கிறார்கள். இதில் ஒருபக்கம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்தியாவை போல் பல நாடு களும் செயற்கைக்கோள்களை உபயோகிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதனால் அவர்களுக்கும் நாம் செயற்கைக் கோள்களை தயாரித்து வழங்கும் வாய்ப்பு உருவாகும். அதனால் ஆராய்ச்சி மனப் பான்மையுடன், வர்த்தக ரீதியான வாய்ப்புகளும் உருவாகும். வர்த்தக ரீதியாக உருவாக்கப்படும்போது அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *