மாரியம்மன் சக்தி இவ்வளவு தானா? தீ மிதிக்கும் போது தவறி நெருப்பில் விழுந்த பக்தர் பலி

Viduthalai
1 Min Read

புவனகிரி, ஆக. 16 கடலூர் மாவட்டம், சிதம்பரம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் முருகன். இவர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பூக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள மாரியம்மன் கோவி லில் தீ மிதிப்பதற்காக கோவிலுக்குச் சென்றுள்ளார். 

அந்தத் தீ மிதிக்கும் தீக்குண்டத்தில் அம்மனை வேண்டிக்கொண்டு இறங்கி யுள்ளார். அப்போது நிலை தடுமாறி நெருப்பில் விழுந்து விட்டார். இதில் முருகனுக்கு இரண்டு கால்களிலும், வயிற்றுப் பகுதியிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து அவரை மீட்டு அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் கடந்த 14.8.2023 அன்று இறந்துவிட்டார்.

 இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சாமி சக்தி என்றும், தான் கேட்கும் வரங்களைக் கொடுத்து விடும் அம்மன் சாமி என்றும் வேண்டிக்கொண்டு தீ மிதித்த பக்தரை அம்மன் காப்பாற்ற வில்லையே! இவ்வளவுதான் மாரியம்மன் சக்தியா?

இன்னும் எத்தனை விபத்துகள் நடந் தாலும் மக்கள் இதை சிந்திப்பது இல்லையே! மக்கள் சிந்தித்து கடவுள் சக்தி இல்லை என்று புரிந்து கொண்டால் மட்டுமே இவர்களைக் காப்பாற்ற முடியும் என்று பரவலாக மக்கள் பேசிக் கொள் கிறார்கள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *