தமிழர் தலைவருக்கு‘தகைசால் தமிழர்’ விருது: மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

2 Min Read

அரசியல்

கோலாலம்பூர், ஆக.16 நேற்று (15.8.2023) தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ‘தகைசால் தமிழர்’ விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விருதினை வழங்கிய தமிழ்நாடு முதல மைச்சருக்கு மலேசிய  மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக.பஞ்சு நன்றி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்திய நாட்டின் விடுதலை நாளான நேற்று (15.8.2023) தமிழ்நாட்டில், தனது இளவயது முதலாக தலைவர் தந்தை பெரியார் அவர் களின்; சுயமரியாதை அறிவியக்கப் பணியினை ஏற்று, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டு சமூகநீதிப் போராட் டத்தை முனைப்போடு முன்னெடுத்த சமு தாயப் போராளியான திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் முனைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு, ‘‘தகை சால் தமிழர்” விருதை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது உலகளாவியத் தமிழர் களுக்குக் கிடைத்திட்ட பெருமையாகும்.

தாம் 10 வயது பாலகனாக இருந்த போதே, தந்தை பெரியாரின் கொள்கை முழக்கத்திற்கு துணையாக இருந்தவர், வாழ்ந்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

மேலும், தந்தை பெரியார் அவர்களால் வழிநடத்தப்பட்ட ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பாக பணியாற்றியுள்ளார். இன்றும் பணியாற்றி வருகின்றார்.

சமூக நீதிக்காக பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.  தனது 90 ஆம் வயதிலும் மக்கள் நலனுக்காக, இன்றும் நாடு முழுமையும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆசிரியர் அவர்கள் இதுகாறும் ஆற்றிய தொண்டறத்திற்குக் கிடைத்திட்ட இவ்விருது பெருமைக்குரியதாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கிய, ‘தகைசால் தமிழர்’ விருதுக்காக உலகத் தமிழர்கள் நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பெருமை மிகுந்த நாளில், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா, அவர்களுக்கு, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் வாழ்த்து களை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். மகிழ்கிறோம்.

– இவ்வாறு மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக. பஞ்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *