முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை, ஜூலை 30 “நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது, ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெ டுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத் துள்ள செய்தியைப் பகிர் கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது. மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக் கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றா லும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். அப் போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றி டுவோம்” என தெரிவித்துள்ளார்.