‘அந்திமழை’ ந.இளங்கோவன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

‘அந்திமழை’ மாத இதழின் நிறுவனரும், நிறுவிய ஆசிரியருமான தோழர் ந.இளங்கோவன் (வயது 55) அவர்கள் 28.07.2024 அன்று மாரடைப்பால் பெங்களூருவில் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தரமான மாத இதழ் என்ற சிறப்புக்குரியது ‘அந்திமழை’ ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டமான திருநெல்வேலியில் பிறந்து, கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்து, முக்கியமான நிறுவனங்களில் பணியாற்றி, பிறகு தொழில் முனைவோராக உயர்ந்தவர். தொழிலில் வெற்றி பெற்று, முன்பு கல்லூரிக் காலத்தில் தான் நடத்தி வந்த ‘அந்திமழை’ கையெழுத்துப் பிரதியை அச்சு இதழாகக் கொண்டு வந்து வணிக சமரசங்களுக்கு ஆட்படாமல் நல்ல பத்திரிகையாளர்களைக் கொண்டு, தரமான எழுத்துகளைப் பதிப்பித்த நம்பிக்கைக்குரிய இதழாசிரியராக உருவாகி அதனை வளர்ந்து வந்தார்.
திராவிட இயக்கம் பற்றிய பல்வேறு செய்திகளை, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுச் சூழலை சரியாகப் பதிவு செய்தது அவருடைய ஏடு. ‘அந்திமழை’யின் நிகழ்ச்சிகளுக்கு நம்மை அழைத்து மகிழ்ந்ததும் உண்டு.
இளைய வயதில் அவருடைய மறைவு தமிழ் இதழியல் உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், ‘அந்திமழை’ இதழின் பொறுப்பாளர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
29.7.2024

கி.வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *