நிலவில் இறங்கத் தயாராகும் நிலவுக்கலன் சந்திரயான் 3

1 Min Read

சென்னை, ஆக.16 சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப் பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 

அண்மையில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 விண் கலம் நுழைந்து, பயணத்தை தொடங்கியது. படிப்படியாக சுற்றுப் பாதையின் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 153ஜ்163 கி.மீ என சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (ஆக.17) விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படுகிறது. வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரை யிறங்க உள்ளது. சந்திரயான்-3 விண் கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக் கெட் மூலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மய்யத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணி கள் தற்போது மேற்கொள்ளப்பட்டன. 

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் பயணித்து வரு கிறது. வரும் 23 ஆம் தேதி சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *