நாட்டிலேயே முதல்முறையாக கோவா அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை

Viduthalai
1 Min Read

பனாஜி, ஆக. 16 – நாட்டிலேயே முதல் முறையாக கோவா அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத இணையர்களுக்கு மிகவும் பொது வான செயற்கைக் கருத்தரிப்பு முறையாக ‘இன் விட்ரோ கருத் தரிப்பு (அய்விஎப்)’ சிகிச்சை விளங்குகிறது.

இந்நிலையில் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இலவச அய்விஎப் சிகிச் சையை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேற்று (15.8.2023) தொடங்கி வைத்தார். 

இதன் மூலம் நாட்டில் இலவச செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்றுள் ளது.

அய்விஎப் சிகிச்சை மய்யத் துடன் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஏஆர்டி) மற்றும் இன்ட்ரா கருப்பையக கருவூட்டல் (அய்யூஅய்) மய்யத்தை முதல மைச்சர் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பிர மோத் சாவந்த் பேசும்போது, “மருத்துவ சேவையில் கோவா மற் றொரு மைல் கல்லை எட்டியுள்ளது. 

இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவம் மற் றும் மகளிர் மருத்துவத் துறை ஏராளமானோரின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

இத்துறைக்கு ஆண்டுக்கு 19,000 புறநோயாளிகள் வருகின்றனர். சுமார் 4,300 கர்ப்பிணிகள் மகப் பேறு சிகிச்சை பெறுகின்றனர்” என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார அமைச் சர் விஸ்வஜித் ரானே பேசும்போது, “நாட்டிலேயே இலவச அய்விஎப் சிகிச்சை வழங்கும் முதல் மருத்துவ மனை இதுவாகும். 

நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்படாது. தொழில் நிறுவ னங்களின் சமூக கடமை (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து முழு நிதியுதவி பெறப் படும்.

இங்கு இலவச அய்விஎப் சிகிச்சை பெறுவதற்கு ஏற்கெனவே 100 பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்” என்றார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *