வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் 11.7.2024 அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஹண்டன் கல்பாசி உணவகத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தி வேல்முருகன் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சி தமிழ் சங்கத் தலைவர் இரா.அறிவுமணி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்க துணைத் தலைவர் குழந்தைவேல் ராமசாமி, செயலாளர் கவிதா சுப்பிரமணியம், மேனாள் தமிழ் சங்க நிர்வாகிகள் அரசு செல்லையா, சுந்தர் குப்புசாமி, அகத்தியன், வாசிங்டன் சிவா மற்றும் கல்லூரி தாளாளர் பாலகன், ஆறுமுகசாமி, தமிழ் சங்க இயக்குனர்கள் எழில் வடிவன், மோகன்ராஜ், அறிவு பொன்னி, சத்தியா தேவி, கலைச்செல்வி, இனியா, இலக்கியா, ஆர்யா, சூர்யா மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தா.வா.க.தலைவர் வேல்முருகனுக்கு ஆடை போர்த்தி நூல் வழங்கி சிறப்பு செய்தார். தொடக்க உரையும் ஆற்றினார். பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், சமூக நீதிக்கு முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, முதலமைச்சர் ஆற்றிய பங்கு பணிகள் குறித்தும், திராவிட மாடல ஆட்சியை பாராட்டியும் திராவிட கருத்தியலின் அடிப்படையில் தாம் செயல்படுவதாகவும் உரையாற்றினார். தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஆற்றிய தொண்டு குறித்து கலந்துறவாடலாகவும் நிகழ்ச்சி அமைந்தது.