கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.7.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிப்பால் மக்கள் கொந்தளிப்பு – பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்: மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
* பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நிட்டி ஆயோக் கூட்டத்தை பத்து மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.

* நிட்டி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு நிகழ்வு.

* நிட்டி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

* விரைவில் நடைபெற உள்ள மகாராட்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எமது கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – சரத் பவார் நம்பிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராட்டிராவில் அஜித் அணியில் இருந்து சரத் அணிக்கு திரும்பிய முஸ்லிம் தலைவர்: ‘பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாக்களிக்கவில்லை’ என தெரிவித்தார்.
* ’தெரியாமல் நடந்து விட்டது’ என்கிறது காவல்துறை. ஹரித்வாரில், கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள மசூதிகள் மற்றும் மசார்கள், பெரிய வெள்ளைத் தாள் களை கொண்டு பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பின்னர் அகற்றப்பட்டன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 10 ஆண்டுகளாக, நிட்டி ஆயோக் ’அவதார’ பிரதமருக்கு ‘ஜால்ரா’ அடித்துக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

தி டெலிகிராப்:

* இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 36% வளர்ச்சி குன்றியவர்கள் என மோடி அரசு ஒப்புதல்; காலை உணவையும் சேர்த்து மதிய உணவை நீட்டித்ததை நிராகரித்த அதே மோடி அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பு என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *