உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்

1 Min Read

சென்னை, ஜூலை 28– அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இ.பி.எஸ்., பிறகு பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும். அந்தப்பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும்” எனக் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தவறுக்கு இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது. திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதி்பதிகள், விசாரணையை ஆக.,7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *