தங்கள் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றை மத்தியப் பிரதேசம் நடத்தவிருக்கிறது என்ற விளம்பரம்தான் அது.
25 ஆண்டுகளாக பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மாநிலம். இந்தியாவின் வளர்ச்சிக் குறியீட்டில் கடைசியில் கூட இருக்கத் தகுதி இல்லாத மாநிலங்களில் முதலிடம் என்றால், அது மத்தியப் பிரதேசம் தான் என்று நகைப்போடு கூறும் அளவிற்குத்தான் அம்மாநில வளர்ச்சி.
அங்கு என்ன குறை? கனிம வளம், நீர்வளம், நிலவளம், வற்றாமல் ஓடும் ஆறுகள், வனங்கள் என அனைத்தும் அங்கே உண்டு. நமக்கு நீர்வளம் மழை வந்தால் தான்! ஆனால், அங்கே அப்படி அல்ல.
ஆனால், அவர்கள் முத லீட்டாளர்கள் கூட்டம் நடத்த மத்தியப் பிரதேச நகரங்களான போபால், இந்தோர், க்வாலி யர் போன்ற எதுவுமே கிடைக்க வில்லையா?
போபால் விமான நிலையத்தில் பசு மாடுகளும், ஆடுகளும் ஓடுபாதையில் மேயும்; விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும் ஊழியர்கள் அங்கு மேயும் ஆடு, மாடுகளை ஓடி ஓடி விரட்டும் நகைச்சுவை எல்லாம் இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
தமிழ் நாட்டில் கோயமுத்தூரில் இந்தத் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது.
ஏன் அவர்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? பாஜகவின் குஜராத், மும்பை, தலைநகர் டில்லி அல்லது கோடை வாஸ்தலங்களான சிம்லா, குலு மனாலி போன்றவை கிடைக்கவில்லையா? இருக்கிறது; ஆனால், அங்கு இவர்கள் தேடும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் கட்டமைப்பு இருக்காது. ஆகையால்தான், ‘திராவிட மாடல்‘ அரசின் மாநிலத்தை தேடி ஓடி வருகின்றனர். இனி மத்தியப் பிரதேசமும், திராவிடத்தால் வளர்ச்சி பெறும்!