மும்பை, ஆக. 16 – மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவா ருடனான சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என்று தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராட்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையிலான சட்டமன்ற உறுப்பி னர்கள் கடந்த மாதம் கட்சிக்கு எதி ராக போர்க்கொடி தூக்கினர். இவர் கள் மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவ சேனா (ஷிண்டே அணி) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு அஜித் பவார் இரண்டு முறை சரத் பவாரை சந்தித்து, தங்க ளுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்க சரத் பவார் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த 12.8.2023 அன்று இரவு புனே நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சரத் பவாரின் நடவடிக்கைகளை குறை கூறும் வகையில் சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) சாம்னா நாளிதழில் நேற்று (14.8.2023) தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. “அஜித் பவார், சரத் பவாரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இந்த சந்திப்பை சரத் பவார் தவிர்க்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது சரத் பவார் மீதான நம்பிக்கையை சிதைப் பதாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரத் பவார்பாரா மதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அஜித் பவாரை நான் சந்தித்ததால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை.
நாங்கள் ஒற்றுமையாக உள் ளோம். ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் 31 மற்றும் செப். 1ஆ-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். உத்தவ் தாக்கரே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் ஆகியோருடன் இணைந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.