ஏழு ஆண்டுகளில் 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் ஆனால் எஸ்.சி. 21 போ் மட்டுமே!

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 27- கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய் யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு 25.7.2024 அன்று தெரிவித்தது.
இவா்களில் 21 பேர் பட் டியல் பிரிவினர் (எஸ்.சி.) என்றும், 12 போ் பழங்குடி பிரிவினர் (எஸ்.டி.) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு ஒன்றிய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்து பூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

நீதிபதிகள் நியமனத் துக்கான அரசமைப்புச் சட்ட விதிமுறைகளானது, எந்தவொரு ஜாதியினர் அல்லது வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வில்லை. எனினும், கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப ்படுவோரிடம் இருந்து உரிய வழிமுறையின்படி அவா்களின் சமூக பின்னணி விவரங்கள் பெறப்படுகின்றன.

நாட்டிலுள்ள உயா்நீதி மன்றங்களில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-இல் 906-ஆக இருந்தது. தற்போது இது 1,114-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் இருந்து இதுவரை 976 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட நீதித்துறையைப் பொறுத்தவரை, நீதித்துறை அதிகாரிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 19,518-இல் இருந்து 25,523-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-இல் இருந்து இதுவரை 62 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், ஓய்வூதியம், படிகள் கடந்த 2016-ஆம் ஆண்டில் கடைசியாக திருத்தியமைக்கப்பட்டன. நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இப்போது இல்லை என்று தனது பதிலில் அமைச்சா் தெரி வித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *