விருத்தாசலம், ஜூலை 27- 21.7.2024 அன்று காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் தர்மநல்லூர் கிராமம் ரத்தினசாமி மணிமேகலை ஆகியோரது மகள் ர.அட்சயபிரியதர்ஷினிக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சொரத்தூர் கிராமம் அன்பழகன் திலகவதி ஆகியோரது மகன் அ.தேவராஜனுக்கும் இணை ஏற்பு விழா நெய்வேலி வட்டம் 29 இல் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுவை திமுக பொறுப்பாளர் ஆடல் அரசன் அனைவரையும் வரவேற்றார். கழக காப்பாளர் அரங்கப் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கடேசன், செயலாளர் வி.அருணாச்சலம், வடலூர் நகர தலைவர் புலவர் சு.இராவணன் ஆகியோர் முன்னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கினர்.
கடலூர் தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் இராச.குழந்தை வேலன் தலைமையேற்று சிறப்புரை ஆற்றி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் உறுதிமொழி ஏற்று மாலை மாற்றிக் கொண்டனர். இணை ஏற்று விழா இனிதே நிறைவு பெற்றது. நிகழ்வில் நெய்வேலி நகர செயலாளர் கு.ரத்தினசபாபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், வடகுத்து கிளை செயலாளர் இரா.கண்ணன், வடலூர் நகர அமைப்பாளர் முருகன், புதுவை தோழர்கள் தீனா, கருணா, பசுபதி, கார்த்திக், கலைமணி, ஜெயா, ராஜேஷ், கங்காதரன், வீரமோகன் ஆகியோரும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மணமக்கள் அட்சய பிரிய தர்ஷினி தேவராஜன் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.