அரும்பாக்கத்தில் நீட் எதிர்ப்பு பயணம்

1 Min Read

நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் அய்ந்தாம் குழு சென்னை பெரியார் திடலில் தொடங்கி தொப்பூர் வரை 40 இடங்களில் பரப்புரை செய்தவாறே சேலம் சென்றடைந்தனர். இரண்டாம் நாளான 12.07.2024 அன்று தாம்பரத்திலிருந்து புறப்பட்டு முதல் தெருமுனைக் கூட்டம் நடைபெறும் அரும்பாக்கம் தாமோதரன் இல்லத்தினருகில் காலை 9:15 மணிக்கு வருகை தந்தனர்.

அங்கு தாமோதரன் இல்லம் அருகில் இருக்கும் கழகக் கொடியை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தக் குழுவில் 23 இருசக்கர வாகனங்களில் 6 மகளிர் உள்பட 37 பேர் பயணம் செய்தனர். மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ.சுரேஷ் இந்த பயணக் குழுத் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் மா.செல்லத்துரை, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சொற்பொழிவாளராகவும் இருந்து மிகச்சிறப்பாக பயணத்தை வழிநடத்திச் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *