அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு

1 Min Read

அரசியல்

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதில், சென்னை நகர மண்டலத்தின் கீழ், 607 பணியிடங் களை நிரப்புவதற்குத் தகுதியான விண் ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி, கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.29,380 வரையிலும், துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.24,470 வரையும் ஊதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலமாகச் சமர்ப்பிக்கலாம். விண்ணப் பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

கல்வித் தகுதி, மாற்றுத் திறனாளி களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி, நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *