பனகால் அரசர் பிரிவு

1 Min Read

சென்ற பல ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவராயிருந்து பேரார்வத்துடன் தம் கட்சிக்குத் தொண்டு செய்துவந்த பனகால் ராஜா, ஒரு வாரம் ஜூரம் அடித்த காரணத்தினால் மரணமடைந்து விட்டதை நேயர்கள் அறிந்திருப் பார்கள். சென்னையிலே பனகால் ராஜா இறந்தார் என்ற செய்தி கேட்டவுடன் ஜனங்களுக்குள் என்னவிதமான பரபரப்பும். துக்கமும் ஏற்பட்ட தென்பதை நன்றாகக் கண்ணால் பார்த்தும் விவரிக்க முடியாமலே இருக்கிறது.

பனகால் இறந்ததனால் ஜஸ்டிஸ் கட்சியார் மட்டும் துக்கப் பட்டார்களென்று சொல்ல முடியாது. எந்தக் கட்சியாருடைய துயரத்திற்கும் அளவே இல்லை. ஏனென்றால், பனகாலை மூன்று விதமாகப் பிரிக்கவேண்டும். மனிதப் பனகால், மந்திரிப் பன கால், கட்சிப் பனகாலென்று மூன்று விதமான தன்மைகளில் பனகால் அரசரை நோக்குவோமாயின், அவருடைய பிரிவைக் குறித்து இந்தியர் ஒவ்வொருவரும் துக்கித்தே ஆகவேண்டுமென்பது வெள்ளிடை மலையாகும். (ஜனவரி – 1929)

நன்றி: ஆனந்தவிகடன் “காலப்பெட்டகம்” பக்கம் 19

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *