நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று,  திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

2 Min Read

கு.பிச்சாண்டி, சே.மெ.மதிவதனி, டாக்டர் எ.வ.வே.கம்பன் சிறப்புரை

திருவண்ணாமலை, ஜூலை 26 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தை வரவேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, தி.மு.கழக மருத்துவரணித் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
13.7.2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திருவண்ணா மலை மாவட்ட கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் சங்கம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணத்தை வரவேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் கழகத் தலைவர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். ப.அண்ணாதாசன் முன்னிலை வகித்தனர்.
நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். முன்ன தாக இருசக்கர வாகன பரப்புரையில் கலந்து கொண்டு வருகை தந்த வர்களுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கருத்துரை வழங்கி உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தி.மு.க மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபா கரன், கோ.வேலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா.தங்கராஜ், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பிரியா ப.விஜயரங்கன், விஜயலட்சுமி ரமேஷ், தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் க.சவுந்தரராசன், ஒன்றியச் செயலாளர் மெய்யூர் ந.சந்திரன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறு முகம், மற்றும் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, விஜி (எ) விஜயராஜ், மங்கலம் பிரபாகரன், கூட்டணி இயக்க நிர்வாகிகள் என்.ஏ.கிச்சா, என்.ஆறுமுகம், பசுமைச்செல்வன், தமிழ்ச்செல்வன், முரளிதமிழன், எம்.சி.ஜெகன், கார்த்தி, திராவிடர் கழக கு.பஞ்சாச்சரம், கோ.தேவராஜ், பா.வெங்கட்ராமன், இராமஜெயம், கமலகண்ணன், ப.பழனி, கு.ராமன், எம்.எஸ்.பலராமன் உட்பட தோழமை இயக்க நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறி வாளர் கழகம், விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிறைவாக முன்னூர் மங்க லம் திராவிட பழனி நன்றி கூறி னார். கூட்ட ஏற்பாட்டினை திரு வண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சிறப்பாக செய்து இருந்தது. முன்னதாக செல்லங்குப்பம் சுப்பிரமணியின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *