நிலவை நெருங்குகிறது சந்திராயன் – 3 விண்கலம்

Viduthalai
4 Min Read

அரசியல்


சிறீஅரிகோட்டா, ஆக. 17
– நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவுக்கலன்-3 விண்கலத்தை இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பியுள்ளது.

சிறீஅரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியின் சுற்று வட்ட பாதையில் சுற்றிய நிலவுக்கலன்-3 விண்கலம் கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்தது. 

அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட பாதையில் முதலில் சுற்றியது. நிலவின் ஈர்ப்பு விசையை நெருங்கிய போது விண்கலத்தின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டன.

இதையடுத்து படிப்படியாக நிலவின் மேற்பரப்பில் இருந்து நிலவுக்கலன்-3 விண்கலம் இருக் கும் உயரம் குறைக்கப்பட்டது. 6ஆம் தேதி 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 4,313 கிலோ மீட்டராக குறைக் கப்பட்டது. பின்னர் 9ஆம் தேதி 1,433 கி.மீட்டராகவும், 14ஆம் தேதி 177 கி.மீட்டராகவும் நிலவுக்கலன்-3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டது.

3ஆ-வது கட்ட உயரம் குறைப் பின் போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 150X177 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைக் கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. அதாவது குறைந்த பட்சம் 150 கி.மீ. தொலைவும் அதிகபட்சம் 177 கி.மீ. தொலை வும் கொண்ட நிலவு வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் இந்த தூரத்தை மேலும் குறைத்து நிலவுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுக்கலன்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதில் 4ஆ-ம் கட்டமாக சுற்றுப் பாதை குறைப்பு பணியை இன்று தொடங்க திட்டமிடப்பட்டது. 

அதன்படி இன்று காலை 8.30 மணிக்கு நிலவுக்கலன்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது. இப்பணி வெற்றிகரமாக நடந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள் ளது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் 153 கி.மீ X163 கி.மீ. தொலைவில் விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இன்று நிலவின் சுற்று வட்ட பாதையில் நிலவுக் கலன்-3 விண்கலத்தின் உயரம் குறைப்பு வெற்றிகரமாக நடந் துள்ளது.

விண்கலம் 153 கி.மீ. X163 கி.மீ. சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இத்துடன் நிலவை சுற்றும் நிகழ்வு நிறைவடைகின் றன. ப்ராபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை கலன்) மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியன தனித்தனி பயணங்களுக்கு தயா ராகுவதற்கான நேரம் இது. 

ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டரை பிரிப்பு நிகழ்வை இன்று (17.8.2023) நடத்தத் திட்டமிடப்பட்டிருந் தது. உயர குறைப்பின் முயற்சி யின் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பிரிக் கப்படுகிறது. அதன்பின் லேண் டர் நிலவை நோக்கி பயணிக் கிறது.

நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் 30 கிலோ மீட்டராக வருகிற 20ஆம் தேதி குறைக்கப்படும். நிலவுக்கலன்-3 விண்கலம் பயணம் முக்கிய கட் டத்தில் இருக்கிறது. இந்த பய ணத்தில் முக்கிய நிகழ்வான உந்து விசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிப்பை, விஞ்ஞானிகள் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள். 

நிலவுக்கலன்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பய ணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. திட்ட மிட்டபடி 40 நாட்கள் பயணத் துக்கு பிறகு வருகிற 23ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நில வில் நிலவுக்கலன்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர் பார்க் கப்படுகிறது. இன்று (17.8.2023) லேண்டர் பிரியும் நிகழ்வையும், 23ஆம் தேதி நிலவில் விண்கலம் தரையிறங்குவதையும் இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர் பார்த்து கொண்டிருக்கிறது. 

நிலவின் தென்துருவத்தை அடைவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது. நிலவின் வட துருவத்தைவிட தென் துருவத்தில் இறங்குவது மிகவும் சவாலான ஒன்று. இதனாலேயே, பல நாடுகள் இதனை கைவிட்டு விட்டன. சூரிய குடும்பம் உருவான போது, தென் துருவத்தில் காந்தக் குவியல்கள் உருவாகின. 

இதனால் தென் துருவ ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கிய மான ஒன்றாக கருதப்படுகிறது. நிலவு உருவானபோது என்ன இருந் ததோ அதெல்லாம் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம் பூமி எப்படி உருவானது? மனிதர்கள் எப்படி உருவானார்கள்? என நாம் அறியாத , நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக் கும். அதுபோல், நிலவின் ரசாய னம், மண், நீர் போன்றவைக ளையும் ஆய்வு செய்ய முடியும். எந்த ஒரு நாடும் தென் துருவம் வரை விண்கலத்தை அனுப்பியது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *