காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி.யின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்

1 Min Read

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி. அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காரைக்குடி ரயில்வே நிலைய சாலையில் உள்ள பெரியார் தோட்டத்தில், அவரது சிலைக்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, மாவட்ட ப.க. தலைவர் எஸ்.முழுமதி, கல்லல் ஒன்றிய தலைவர் வீ.பாலு, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில்லைராசா, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, ஜெ.இங்கர்சால், சொ.ஜான்சி ராணி, இ.பெ.தமிழீழம், கு.ராஜ்குமார், கா.ரம்யமலர், ர.பு. சித்தார்த்தன், ர.பு.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.(25-07-2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *