செய்தியும், சிந்தனையும்…!

1 Min Read
முதலில் நிதி ஒதுக்கட்டும்!
* ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
–  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
>>  இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய அரசு நிதியை ஒதுக்கிவிட்டு, இப்படிப் பேசினால், நன்றாக இருக்கும்.
அது மட்டும் ஏன்?
*  ஒரு மாநிலத்தின் பெயரை பட்ஜெட்டில் குறிப்பிட வில்லை என்றால், அரசு திட்டங்கள் அந்த மாநிலத்துக்கு கிடைக்காது என்று அர்த்தம் அல்ல!
–  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
>>  அப்படி என்றால் சில மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடுவது மட்டும் ஏன்? அங்கே தான் எழுகிறது பிரச்சினை.
எதிர்த்தது ஏன்?
* உதய் மின் திட்டம்பற்றி நேருக்கு நேர் வாதிக்க தயாரா என்று மேனாள் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு சவால் விடுத்துள்ளார்.
>>  அப்படி என்றால் உதய் மின் திட்டத்தை மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்தது ஏன்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *