‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை. அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் முழுமையாக பயன் பெறலாம். அரசு பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியிலும், 8, 9 அல்லது 10-ஆம் வகுப்பு வரை படித்து அய்டிஅய் பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம்.
வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஒரே குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றாலும், அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பாடப் பிரிவில் பயில்பவர்களுக்கு முதல் 3 ஆண்டுகள் மட்டும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, பிற மாநிலத்தில் ஒன்றிய அரசின்கீழ் செயல்படும் அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.எஸ்.இ.ஆர். போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள். தொலைதூர கல்வி, அஞ்சல்வழி, அங்கீகரிக்கப்படாத உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற இயலாது. மற்ற மாநில பள்ளிகளில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான உச்ச வரம்பு, ஒதுக்கீடு என எந்தப் பாகுபாடும் இல்லை
Leave a comment