பாப்பிரெட்டிப்பட்டியில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் 15.7.2024ஆம் தேதி அன்று பேருந்து நிலையம் அருகே திராவிட மாணவர் கழகம், கழக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் கூட்டம் ஒன்றிய கழகத் தலைவர் நல்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மாரி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு.முல்லையரசு நீட் தேர்வு குறித்து தலைமைக் கழகம் வெளியிட்ட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு கருத்துரையாற்றினர். கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல் வன், பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் மூ.சிவகுமார், நகர செயலாளர் மணிசக்திவேல், இளைஞர் அணி செயலாளர் மோகன்குமார், மாணவர் கழக செயலாளர் சிவானந்தம், திமுக மாணவரணி செயலாளர் சுர்ஜித் குமார், கழகத் தோழர்கள் பூபேஸ் ராஜா, சாய்குமார், அய்யனார், தென்றல் பிரியன், பயணக் குழுவில் தொடர்ந்து வருகை தந்த வேப்பிலைப்பட்டி தோழர்கள் இ.சமரசம், திருவள்ளுவன், சூர்யா, அம்மாபேட்டை மணி, உமா, வேப்பநத்தம் கல்பனா, சிந்தல்பாடி பச்சையப்பன் மற்றும் விசிக, பொது வுடமை இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். பயணக் குழுவில் இடம் பெற்ற அனைவரையும் மாவட்ட கழகத் தலைவர் கு.தங்க ராஜ் தமது இல்லத்தில் வரவேற்று சிறப்பு விருந்தளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *