பாப்பிரெட்டிப்பட்டியில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை!

Viduthalai
1 Min Read

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் 15.7.2024ஆம் தேதி அன்று பேருந்து நிலையம் அருகே திராவிட மாணவர் கழகம், கழக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் கூட்டம் ஒன்றிய கழகத் தலைவர் நல்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் செங்கல் மாரி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு.முல்லையரசு நீட் தேர்வு குறித்து தலைமைக் கழகம் வெளியிட்ட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு கருத்துரையாற்றினர். கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரையாற்றினார்.
இறுதியாக கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல் வன், பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் மூ.சிவகுமார், நகர செயலாளர் மணிசக்திவேல், இளைஞர் அணி செயலாளர் மோகன்குமார், மாணவர் கழக செயலாளர் சிவானந்தம், திமுக மாணவரணி செயலாளர் சுர்ஜித் குமார், கழகத் தோழர்கள் பூபேஸ் ராஜா, சாய்குமார், அய்யனார், தென்றல் பிரியன், பயணக் குழுவில் தொடர்ந்து வருகை தந்த வேப்பிலைப்பட்டி தோழர்கள் இ.சமரசம், திருவள்ளுவன், சூர்யா, அம்மாபேட்டை மணி, உமா, வேப்பநத்தம் கல்பனா, சிந்தல்பாடி பச்சையப்பன் மற்றும் விசிக, பொது வுடமை இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். பயணக் குழுவில் இடம் பெற்ற அனைவரையும் மாவட்ட கழகத் தலைவர் கு.தங்க ராஜ் தமது இல்லத்தில் வரவேற்று சிறப்பு விருந்தளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *