பொம்மிடி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், 15.7.2024ஆம் தேதி அன்று பொம்மிடி ரயில் நிலையம் முன் 12 மணி அளவில் நீட் எதிர்ப்புப் பரப்புரை பயண கூட்டம் நகரத் தலைவர் இரா.ஆனந்தன் தலைமையில். நகர துணை செயலாளர் பிரகாசம், திமுக கவுன்சிலர் கோகுல், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் சண்முகம், தமிழ்நாடு பௌத்த அறநிலையாளர் சங்க தலைவர் தம்மச்சுடர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தி புஷ்பராஜ் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் வெளியிட்ட 100 புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.
பரப்புரைப் பயண நோக்கங்களை பற்றி மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார்.
நீட் தேர்வு முடிவுகள் குறித்தும், அதனால் தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள் மரணம் அடைந்ததை நினைவூட்டியும், அதனால் ஏற் படும் பாதிப்புகள், நீட் தேர்வு மோசடிகள் குறித்து கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாண வர் கழகத் தலைவர் சாய்குமார், வேப்பிலைப்பட்டி தோழர்கள் இ.சமரசம், சூர்யா, திருவள்ளுவன், அம்மாபேட்டை மணி, மகளிர் அணி தோழர்கள் கல்பனா, உமா, பில்பருத்தி மாதையன், சிவாஜி, மற்றும் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.