காஷ்மீருக்கு என்று இருந்த தனி உரிமை உள்ள சட்டம் 370 பிரிவை நீக்கியதற்கு பிறகு, அங்கே அமைதி நிலவுகிறது என்று சொல்லி வந்த பிஜேபி அரசு, இப்பொழுது என்ன கூறுகிறது? காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் கூறி இருக்கிறாரே! இது என்ன முரண்பாடு? ஒன்றிய பிஜேபி அரசு தோல்வியை ஒப்புக் கொண்டது என்பதைத் தானே இது காட்டுகிறது?