‘நீட்’டை திணிக்கும் ஒன்றிய அரசு – ஆளுநரைக் கண்டித்து மாபெரும் பட்டினி அறப்போர்!

Viduthalai
7 Min Read

தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி கூட்டறிக்கை

அரசியல்

சென்னை,ஆக.17- திமுக இளை ஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக மருத் துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, திமுக மாண வர் அணி தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து _ அவர்களின் உயிரைப்  பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய் யாத ஒன்றிய அரசையும், பொறுப் பற்ற ஆளுநரையும் கண்டித்து, தி.மு.கழகத் தலைவர் _ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் அறிவுறுத்தலின்படி, தி.மு. கழக இளைஞர் அணி _ மாணவர் அணி _ மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் பட்டினி அறப்போரை நடத்தவுள்ளோம்.

‘நீட்’ மரணம்

அரியலூர் அனிதாவில் ஆரம் பித்த நீட் மரணம், குரோம் பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர் கிறது. செல்வசேகர் அவர்களின் உடலுக்கு மரியாதை செய்யச் சென்ற போது, யாரை தேற்றுவது _ யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல் லோரும் சோகத்தில் உறைந்திருந் தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது.

இந்த மரணங்கள் அனைத் திற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் _ அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் _ நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப் பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வரு கிறது.

ஆனால், அந்த நடவடிக்கை களுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வரு கிறார்.

நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.

நேருக்கு நேர் கேள்வி

“நீட் மசோதாவில் கையெழுத் துப் போட மாட்டேன்” என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார்.

இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் ராமசாமி அவர்களின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மய்யம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர் கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.

நீட் விலக்கு மசோதாவை குடி யரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடி யும்?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர் கள் ஆட்சியின் போது-அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சி யின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது.

நீட் விலக்கிற்காக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறை வேற்றி அனுப்பிய சட்ட மசோ தாவை, குடியரசுத் தலைவர் நிரா கரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அ.தி.மு.க. அடிமை கள் மறைத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழ்நாட்டுக்கே தெரிய வந்தது.

துரோக வரலாற்றை…

இப்படிப்பட்ட துரோக வர லாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அடிமைகளுக்கோ நம்மை விமர் சிக்க எந்த அருகதையும் இல்லை.

நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ் நாட்டில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிற இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது.

கழகத் தலைவர் _ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.கழக இளைஞர் அணி _ மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டன.

கல்வி என்பது பொதுப் பட்டி யலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர் கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மே 2021இல் கழக அரசு ஆட் சிக்கு வந்தவுடனே, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலை மையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப் பட்டது.

இந்தக்குழு அளித்த அறிக்கை யின் அடிப்படையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக் காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளு நரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல் வேறு தருணங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியு றுத்தி வந்தார்கள்.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநி லப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர் கள் கடிதம் எழுதினார்கள்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம் பர் 27 -ஆம் தேதியன்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்.

இயக்கங்களின்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொடர் அழுத்தம் _ பிற அரசியல் கட்சிகளின் அழுத் தம் _ பொதுமக்கள் _ மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

மசோதாவை திருப்பி அனுப்பி யது குறித்து, ஆலோசிப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர் கள் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

மீண்டும் நிறைவேற்ற

இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோ தாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப் பட்டது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப் பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக் கப்பட்டது.

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோ தாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து வலியு றுத்தினார்கள்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக் காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று மாண்புமிகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரம ணியன் அவர்கள், நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோ தாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி 5.5.2022 அன்று அனுப்பி வைத்தார்.

இப்படி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் தி.மு.கழக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளு நர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் ஒவ் வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.

மாண்புமிகு பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வருகிற போதும், மாண்புமிகு முதலமைச்சர் அவர் கள் டில்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவதுதான்.

தி.மு.கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடி அவர்களை டில்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித் தார்கள். அப்போதுகூட, பிரதமர் அவர்களிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்கள்.

இப்படித் தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத் தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது.

இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு நாங்கள் சொல்வ தெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது.

மன உறுதியுடனும்…

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதி யுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம்.

எத்தனை மரணங்கள் நிகழ்ந் தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் _ இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளு நரையும் கண்டித்து, இந்த மாபெரும்  பட்டினிப்  போராட்டம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள் ளது. 

தி.மு.கழக இளைஞர் அணி _ மாணவர் அணி _ மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற பட்டினி அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். 

அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங் களில் நடைபெறவுள்ள இந்த பட்டினி அறப்போரில் அனைத் துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம்.

நீட் தேர்வை ஒழித்து, தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் _ விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *