புதுச்சேரி, ஜூலை 23- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராச னாரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம். 21.7.2024 மாலை 7-00 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு மு.ந.ந.பாஸ்கரன் தலைமையேற்றார். வந்திருந்த அனைவ ரையும் மு.ந.ந.நல்லையன் வரவேற்றார். புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மறைந்த மு.ந.நட ராசனாரின் படத்தினை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார்.
மு.ந.நடராசன் அவர்களின் கழக பணிகளை நினைவு கூர்ந்தும், தற்போது கழகத்தின் செயல்பாடுகளை விளக்கியும் பேசினார். தலைமை கழகத்தின் சார்பில் புதியதாகத் தொடங்கப்பட்ட பெரியார் விஷன் OTT தொடர்பான செய்திகளை விளக்கி அனைவரும் பெரியார் விஷனில் தங்களை இணைத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். கழகக் காப்பாளர் இர.இராசு, மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் ஆகியோர் மறைந்த மு.ந.நடராசனாரின் சிறப்பியல் புகள் பற்றி நினைவு கூர்ந்தனர்.
நிறைவாக புதுவைச் சிவம் அறக் கட்டளை நிறுவனர் சிவ. இளங்கோ சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர், காப் பாளர் இரா.சடகோபன், தெ.தியாகு, மு.குப்புசாமி, தொழிலாளரணி செயலாளர் கே.குமார், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், திராவிட மாணவர் கழகத் தலைவர் ப.இராக பிரியா, புதுச்சேரி நகர, கொம்யூன் கழகப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், பெ.ஆதிநாராயணன், துரை.மு.வீரமணி, ப.தேவிகா, இரா.வெற்றிவேல் மற்றும் நடராசனரின் வாழ்வினையர், மகள், மருமகள், பேரன்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் நெறியாளுகைச் செய்தும், அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் நிறைவு செய்தார்.